புதுமைப்பெண்கள்
பாரதி கண்ட புதுமைப் பெண்கள்
பாரினில் இன்று மதுக் கடையில் !
மயக்கிட வைத்தனர் மற்றவர்களை
மயங்கிக் கிடக்கின்றனர் மதுவருந்தி !
தாய்மை நிலைக்கு அடைய உள்ளவர்கள்
தன்னிலை மறந்து நிதானம் இழக்கின்றனர் !
மாறிடுமா இந்த இழிவு நிலையும்
மதிப்பைப் பெறுமா பெண்கள் சமூகம் !
பழனி குமார்