தமிழ்ப்பாவை

தமிழ்ப்பாவை
பாடல் 1

மகிழ்மன நாடும் மங்கையர்தொழும்
மார்கழியானவன் மலரது சூடினாள்
கோதையவள் பாவைநோன்பின்
பாதை பகன்றாள் பதமெலாம் நின்
கமலச்செந்தாள் பணிய படைத்தாள்

கொண்டவள் மனோரஞ்சித மணம்
உறை மணிமார்பில் பூசிநாசியானாள்
தமிழ்பாவை யானவள் தடம்பற்றியாங்கு
ஆதிசேடன் குடைகீழ் உலகளந்தான்
வில்லான் விழிப்பனி விலக்கியாதவன்

அலங்காரப்பிரிய அழகானவன் கருமை
விழித்திரை விட்டகலும் முன் நெகிழ்
மாந்தகுணம் மறைந்து அகம்புறம் நின்
நாமபேரலை நிறையும் பாற்கடலின்
துளியாகும் வரம் கேட்பேன் மறுப்பாயோ...

ச.பு.நிவேதா

எழுதியவர் : ச.பு.நிவேதா (10-Jan-17, 3:22 pm)
பார்வை : 56

மேலே