காலங்கள்
..............................காலங்கள்..............................
கும்மிருட்டின் வெளிச்சத்தில் புதைந்த
கடந்த காலத்தின் கால்தடங்களில்
ஒட்டிக் கொண்டு நகர்கிறது நிகழ்காலத்தின் நிழல்கள்....!
எதிர்காலத்தின் கணிக்க முடியாத நிகழ்வுகள்
சில நேரங்களில் தோன்றி மறைகிறது வரைந்து வைத்த ஓவியமாய்.....!
மூன்று காலங்கள் நடுவில் முட்டி மோதுகிறது வாழ்க்கை...
எதிர்பார்க்காத சம்பவங்கள் திசை திருப்பி விடுகிறது பாதைகளின் முடிவிடங்களை....!
ஒவ்வொரு நாளின் பயணத்தையும் மீட்டிப் பார்க்கிறது கிழித்தெறிந்த நாட்காட்டியின் திகதிகள்...
வாழ்ந்த காலங்களின் கதைகளை மொத்தமாய் சொல்கிறது தினக்குறிப்பின்
தேய்ந்து போன பக்கங்கள்....!
காலத்தின் விந்தையான கற்பனைகளில்
எங்கும் நிற்பதில்லை நொடி முட்களின் சுழற்சி...
மரணத்தின் முடிவுரையில் எழுதப்படுகிறது
வாழ்க்கைப் பக்கங்களுக்கான முற்றுப்புள்ளி....!