அடங்கா காளைகள்

மரபணுவில் கலந்தது
மரணம் என்றாலும் துணிந்து நிற்போம்
வெறும் போட்டி என்று அல்ல போட்டி
போட்டு வந்த எங்கள் வீரம்
ஞாயிறு சென்று திங்கள் வருவது இயற்கை என்றால்
ஏறு தழுவுதல் எங்கள் குண இயற்கையே
செயற்கையை கட்டி திரியும் வாழ்க்கை இதில்
இயற்கையாய் ஒட்டிக்கொண்ட ரோசம் இது
வாழையடி வாழை வழி இதனை
இன்று புரிந்த சட்டம் ஒன்றும் செய்து விடாது
இது வேண்டாம் என்று சொல்வது முறை இல்லை
இவர்களை தடுத்து விட உங்களுக்கு உரிமை இல்லை
தடை என்று நீங்கள் கூறுவதை
தகர்த்து விட துணிந்து விட்டோம்
ஏனடா தடுத்தோம் என்று
யோசிக்கும் படியும் செய்து விடுவோம்

----------- அடங்கா காளைகள்

எழுதியவர் : வான்மதிகோபால் (12-Jan-17, 5:49 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 1719

மேலே