வானவில்

நான் கண்ட நிறம் கருமை
மனதில் பட்ட நிறம் வெண்மை...!
கண்ணில்லாத எனக்கு காதில் கேட்கும்
வானவில்லின் நிறம் ஏழும் அருமை..!

திடமான வாழ்வும் இல்லை
திறமைக்கு ஆதாரமும் இல்லை...!
கண்ணெதிரே ஆயிரம் வழிகள்
பார்க்க இல்லை...இரு விழிகள்...!

கால்கள் போன பாதை நினைவில்லை
காதல் அழிந்த சுவடுகள் தெரிவதில்லை ...!
காலம் கடந்த நாட்கள் புரியவில்லை
இதை சொல்ல நல்ல உள்ளம் தென்படவில்லை...!

இறைவா..! வானவில்லின் நிறங்கள் கொண்டு
கார்முகிலின் அழகை கலந்து
வைரத்தின் வைரமாய் எனக்கு
வலியுள்ள விழியில் ஒளி தருவாயா...!

சிறகில்லா பறவையாய் சுற்றித் திரிகிறேன்
சிதறாத கனவை மனதில் ஏந்தி..!
ஒருநாள் என் வாழ்க்கையும் விடியும்
வாழ்வோடு கண்ணும் ஒளி பெறும்...!

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (12-Jan-17, 9:18 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : vaanavil
பார்வை : 182

மேலே