பொங்கும் தமிழா பொங்கல் வாழ்த்துகள்

பொங்கல் திருநாள்
தழினின் நெஞ்சம் நிமிர்ந்த நாள்
சம்பா அறுவடை தெறித்து
காளைகள் கட்டவிழ்த்து
ஓடும் நாள்...

சம்பா அரிசி பால் கேட்க
பசுவின் அன்பு பாலாக
பானையில் பொங்கல் பேசும்
புதுப்பொலிவோடு
தமிழன் வேட்டி கட்டி....

வீரத்தை நெஞ்சில் சுமந்து
தன் குடும்பம் அன்பில் கலக்க
கலச்சாரம் களையாமல்
திருநாளை தமிழில் அழைக்க
பொங்கி வரும் பொங்கல்....

இனிதே பேசட்டும்
நம் வாழ்வில் தீமைகள் களைந்து
நன்மைகள் ஒளிரும் நன் நாளாகட்டும்
இன்பம் பொங்கும் பொங்கல் போல்

தமிழனாக உயிரோடு வாழும்வரை
நம் வாழ்வில் நன்மைகள் வளரட்டும்
வாழ்க தமிழனின் கலாச்சாரம்
பொங்கும் பொங்கல் போல

பொங்கல் நல்வாழ்த்துகள் தமிழனுக்கும் தமிழ்வாழ் இந்தியனுக்கும்
எழுத்து.காம் நண்பர்களுக்கும்......

எழுதியவர் : சிவசக்தி (14-Jan-17, 3:18 pm)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 212

மேலே