உலகிற்கு உணவு சமைக்கும் கலைஞன் உழவன்

ஊருக்கு உழைப்பவன்
உழவன் மட்டும்தான்
அவன் இங்கு இல்லையென்றால்
உனக்கு ஏது உணவுடா?
அவன் காலினை தொட்டு
தினம் வணங்குடா...
அவன் தான் உலகத்திற்கு
முதல் கடவுளு
இல்லையென்று சொன்னால்
உன் குடல் வெந்திடும்....
அவனை மதித்தால்
உன் வயிறு நிறைந்திடும்
அவன வெறுத்தால்
உன்னுயிர் செத்துப்போயிடும்....

அனைவருக்கும்
என் இனிய
உழவன் திரு நாள் வாழ்த்துக்கள்....
கிச்சாபாரதி

எழுதியவர் : கிச்சாபாரதி (14-Jan-17, 11:43 pm)
பார்வை : 255

மேலே