நகைச்சுவை- ராமு-சமு உரையாடல்

சோமு : ஐயா , ராமு ஐயா , குறுகிய காலத்துல
சில பேருங்க முயல் வேகத்துல முன்னேற்றாங்க
வெற்றி பாதை நோக்கி இது எப்படிங்க ..............

ராமு : டேய் சோமு இதுக்கு குறுக்கு வலி னு பேரு;
இப்ப நீ ஒரு கட்சியில மெம்பெர் ஆய்ட்டேனு வெச்சுக்கோ
தொண்டனாய் சேர்ந்த நீ தலைவனாய் மாற
உனக்கு மேல் இருப்பவரை எல்லாம் பார்க்கும்போதெல்லாம்
கைக்கு கூப்பி, கீழே விழுந்து சேவிக்கணும்
அவர் ஆனாய் இருந்தால் ஐயா தெய்வமே என்று
அழைக்கணும்; பெண்ணாய் இருந்தால்
அம்மா என்று அழைக்கவும் .................
உனக்கு முன்னே முன்னேற்ற பாதை தெரியும் !

சோமு : ஐயா நான் கடவுள்,தாய்-தந்தை, ஆசான் தவிர
வேறு யாரையும் வணங்குவது இல்லீங்க...........

ராமு : அதாண்டா நீ முன்னேறல

சோமு : என்ன செய்ய அண்ணே, நான் வளர்ந்த விதமும் அப்படி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jan-17, 1:31 pm)
பார்வை : 238

சிறந்த நகைச்சுவைகள்

மேலே