சன்னலுக்கு வெளியே
குறை ஒன்றும் இல்லை...
குறை எல்லாம் சன்னலுக்கு வெளியில் வைத்து விட்டான்...
நான் வேடிக்கை பார்க்கும் இயற்கையையும்
நான் கேட்கும் இசையையும் தாண்டி
இதன் ராகம் ஓயாதது...
யாருக்கோ என்று தாண்டிப் போக முடியவில்லை...
காரணம் என் மனம்...
எனக்கென்று மனிதத்தை படைத்த இறைவன்
ஏன் எல்லோருக்குள்ளும்
அலட்சியத்தையும்
சுயநலத்தையும்
அதனால் சிலருக்கு அழுகையையும்
வறுமையையும்
இருண்ட உலகையையும்
உரிமையை இழந்த வாழ்வையும்
அடையாளமின்மையான வாழ்வையும் எழுதி வைத்தான்...
விடியட்டும் வாழ்வு
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கட்டும்