இமைகளின் பொங்கல்

அவள் விரல்களால் மைப்பூசி
மீட்டப்பட்டிருந்த இமைகளை நான் காண...
இதழ்களால் முணுமுணுத்து
நாவால் தீ மூட்டி சினத்தை
இமைகளில் பொங்கவைத்தாள் …
அதையும் இனிமையென்றெண்ணி
உண்டுகொண்டிருக்கிறேன்என் விழிகளால்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (15-Jan-17, 4:24 pm)
பார்வை : 166

மேலே