SMS

ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது. பெண்மணியும் தனியாகச் சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்குத் தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள். அவள் இந்த விபரத்தை தன் கணவனுக்குத் தெரிவிப்பதற்காக மொபைல் மூலம் SMS feed செய்து அனுப்பினாள். SMS தவறுதலாக கணவனுக்குப் பதில் வேறொறு நபருக்குச் சென்று விட்டது. அந்த மணிதர் அப்பொழுது தான் தன் இறந்து போன மனைவிக்கு இறுதி மரியாதைகளைச் செய்து விட்டு வந்திருந்தார். அவர் அந்த SMS ஐ படித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ளHOSPITALல் ADMIT செய்தனர். அந்த SMSல் கீழே உள்ளபடி எழுதி இருந்து. நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன். தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது. நீங்கள் என்னைப் பற்றி கவலைப் பட வேண்டாம். முடிந்தால் இரண்டொரு நாட்களில் உங்களையும் அழைத்துக் கொள்கிறேன் - இப்படிக்கு, தங்கள் மனைவி.

எழுதியவர் : செல்வமணி (15-Jan-17, 10:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 445

மேலே