காதலின் உயிரெழுத்து

அ__அந்திபொழுது அன்று
அருகில் அமர்ந்த
அவனால் அணுக்களிலெல்லாம்
அமர்களம்...அட்டகாசம்....
ஆ__ஆலமரத்தடியில் ஆவல்பொங்க
ஆசைமுகத்தை ஆராய
ஆயுள்வேண்டி ஆர்பரித்தேன்...
இ__இம்மியளவும் இடைவேளை
இல்லாமல் இதயம்
இசைகச்சேரிவைக்க
இயல்புநிலை இழந்தேன்...
ஈ__ஈர்பிசையால் ஈர்க்கபட்டு
ஈகைக்காதலை ஈடுபாட்டுடன்
ஈன்றபொழுது...
உ__உள்ளமும், உயிரும், உதிரமும்
உனக்கே உயில்லெழுதுகிறேன்
உரக்கச்சொல்லி
உரையவைத்தாய்...
ஊ__ஊசிமுனையைவிலக்கி
ஊமையின்யுள்ளத்தில்
ஊஞ்சலாடி ஊரரிய
ஊர்ந்து ஊர்வலம்வைக்க
ஊக்குவித்தவனே...
எ__என்னவனின்காதல்
எனக்கே எனக்கா???
எதிர்பார்ப்புகள் எல்லைமீறியது
எதிர்கால எதிர்திசையில்...
ஏ__ஏன்??? ஏழைக்காதல்
ஏற்கபடமாட்டாதா???
ஏழுஜென்மதேடலின்
ஏதுவானபதிலை
ஏந்தநிற்கிறேன்...
ஐ__ஐய்யோ! ஐயம்வேண்டாம்!
ஐம்பொறிகளுக்கும்,
ஐம்பூதங்களுக்கும்,
ஐஸ்வரியம்சேர்க்க
ஐக்கியமாவேன்
ஐயாஉன்னில்...
ஒ__ஒன்றுவிடாமல் ஒட்டுமொத்தமாக
ஒப்பந்தமின்றி ஒப்படைக்கிறேன்
ஒண்டிக்கட்டையில்
ஒட்டிக்கொண்டு
ஒளியநீவேணும்...
ஓ__ஓரவஞ்சனையில்லை,
ஓரப்பார்வையிலே
ஓராயிரயுகத்தை
ஓவியதீட்டியவள், ஓசையுடன்
ஓயாமல் ஓடிவருவேன்
ஓலாட்டு ஓடையில்...
ஔ_ஔவியமில்லா
உலகத்தில்தான் காதல்
ஔடதம் விருந்தாகும்...
ஃ__ ''அ-ஃ" என்ற சத்த சிரிப்புடன்
அவனை அவள் தழுவிகொள்ள
காதல் பிறந்தது வெட்கத்துடன்..
காதலன் பிடியை இறுக்க,
காதலி நெளிந்தாள் நாணத்துடன்...
இந்த இடைபட்டவேளையில் தான்
காதலின் உயிரெழுத்துகள்
உயிர்பெற்றது.......வரம்பெற்றது.......

#ஸ்ரீதேவி#

எழுதியவர் : ஸ்ரீதேவி (15-Jan-17, 11:05 pm)
பார்வை : 413

மேலே