உருக்கம்
அவளும் ஒரு மெழுகுவர்த்தி
தானோ.........
அவன் வரவை
எண்ணி
அனலிட்ட மெழுகாய்
உருகினாள்...........
உருகும் மெழுகாய்
நாட்களும் கரைய...........
உருகும் மெழுகில்
மிளிரும் தீபமாய்.........
நெஞ்சில் அடங்கா
வேள்வியும் வளர.............
நெஞ்சில் அனல்
பறக்கும் வேள்வியால்...........
அனல் தாங்கா
கயல் விழியில்
கண்ணீரும் வற்றியதே...........
உருகும் மெழுகை
அனல் வீசி
மிளிரும் தீபத்திற்கும்
தெரிவதில்லை.............
உருகும் அவள்
நெஞ்சம் தூரத்தில்
இருக்கும் அவனுக்கும்
தெரிவதில்லை..............
எனில்........
அவளும் ஒரு
மெழுகுவர்த்தி தானோ...........