இணைதயத்தில் வாழும் தமிழ்

இணை(த)யத்தில் வாழும் தமிழ்

எத்தனை கோடி இன்பம்
வைத்தாய்
இந்த இணை(த)யத்திலே
இறைவா !

இப்போதே பூமிக்கு
இறங்கி வரவேண்டும் – நீயும்
இணையத்திலே
மூன்றுதமிழிலே
இன்று பேசி பாடி
ஆடி மகிழவேண்டும் !

கருவிலே
இருக்கும் குழந்தையும்
குருவின்
துணை இல்லாமலே
இணையம்
என்னும் ஏட்டில்
திருக்குறளை நன்கு படிக்கும் !

பக்கத்தில்
இணையதளம் இருந்தால்
பாலைவனத்தில் கூட
நீங்கள்
முத்தமிழில் பேச, படிக்க, பாட
விளையாடக்கூட முடியும் !

ஒளவை வழங்கிய ஆத்திச்சூடி
ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள்
கம்பன் படைத்த ராமாயணம்
கண்ணன் போதித்த கீதை
திருவாசகம் தேவாரம் திருவருட்பா
உருக்கமான நூல்களைத் தேடி
அன்று
நூலகத்தில் படித்தோம்
இன்று
இணை(த)யத்தில்
கண்டு கேட்டு படித்து
பாடி மகிழ்கிறோம் !

நாம் தனிமையை விரட்ட
அன்று
மனிதனிடமே பேசினோம்
இன்று
மனதோடு இணை(த)யத்தில்
இரண்டறக் கலந்து பேசி
இன்பமாக பாடி மகிழ்கிறோம் !

'தமிழோசை அகிலமெல்லாம்
பரவும் வகை செய்ய வேண்டும்'
அன்று
பாரதி கண்ட கனவு
இன்று
இணையத்தில் நனவாகி
நாம் இணை(த)யத்தில்
கண்டும் கேட்டும் மகிழ்கிறோம் !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (16-Jan-17, 1:37 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 145

மேலே