படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

இனிக்கவில்லை
பொங்கல்
உழவர்கள் தற்கொலை !

மகிழ்வோடு வாழ வேண்டியவன்
மனம் உடைந்து தற்கொலை
தலைகுனிவு !

முற்றிலும் உண்மை
உழுதவன் கணக்குப் பார்த்தால்
ஒன்றும் மிஞ்சவில்லை !

உழவனைத் தொழ வேண்டும்
என்றார் வள்ளுவர்
வாழ விடவில்லை !

உலை வைத்தது
உழவனின் வாழ்விற்கு
உலகமயம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-Jan-17, 1:40 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 78

மேலே