மரணக்கடிதம்

என் மீது அக்கறை கொள்ள
யாரும் எனக்குத் தேவையில்லை
என் மீது உண்மையாக
பாசம் கொண்டவர் இங்கு இல்லை
தேவையென்றால் நான் ஒரு கருவி
தேவையில்லாமல் நான் ஏன் ஒரு பிறவி ???????
வேதனை முட்கள் நிறைந்த பாதையில்
நடக்கின்ற வலியே எனக்குப் போதும் .......
இத்தனை காலங்கள் கழித்தது போதும்
வேண்டாம் அந்த மனச்சிறைக்கோலம்
அருவியாக பாய்ந்த எந்தன் சிரிப்பு
அரண்ட இருளில் ஒளிந்துகொண்டது நிழலாய்
யாரும் கேட்டுப் பிறப்பதில்லை ...........
யாரும் விரும்பி இறப்பதில்லை ...........
என்பது உனக்குப் புரியவில்லை.............
என்ற சிலர் வார்த்தைகளின் மழையில்
நனைந்து நனைந்து எந்தன் உள்ளச்செடிகள்
வாடி வதைந்து போனதுதான் மீதி.
யாசனை செய்து பார்க்கின்ற நேரம்
கண்கள் முன்னில் உறவுகளின் ஜாலம்
இமைகள் மூடி விழிக்கின்ற நேரம்
விடையாய் வருமே எந்தன் கண்ணீர் ..........
வேள்வியில் திளைக்கும் என் துக்க யாகம்
சுடுகின்றது என்னைச் சூழ்ந்துள்ளவர்களை
வேள்விகள் செய்து உள்ளம் குளிரும்
தேவலோகம் நான் செல்லும் நேரமிது !!!!!!!
சூழ்ச்சிகள் நிறைந்த இவ்வுலகில் .............
கடவுள் என்னிடம் வரம் கேட்டால் .....
நொறுங்கிய இதயம் கூறும் பதில்
"அன்பின் வறுமையில் இறந்தது போதும்
அன்புடன் வருகிறேன் உன்னுடன் நானும் "...............

எழுதியவர் : ஜனனி (16-Jan-17, 2:47 pm)
சேர்த்தது : JANANI
பார்வை : 118

மேலே