ஜல்லிக்கட்டு

காங்கேயன் நடந்துவந்தா
காட்டுபுலி பதறுமடா!
காங்கேயன் பேரகேட்டா
கலங்கிவிடும் சிங்கமடா!

பெசபி்ஃக்கடல் ஆழத்தில்
தூண்டிபோட்டா வீரமில்ல!
ஜல்லிகட்டு விளையாட்டு
வீரத்தோட வேறுபுள்ள!

மரபணுவில் வந்தவங்க
மசிருகூட குறையாது!
உலகமழியும் தருணம்வரை
தமிழ்மொழியும் அழியாது!

திமில்கொண்டு வருகிறதே
எங்கஊரு நாட்டுசிங்கம்!
திமிர்கொண்டு எதிர்வந்தால்
எமனக்கூட முட்டுந்தங்கம்!

தமிழினத்தின் வீரமெல்லாம்
சிலவிளையாட்டே சொல்லுமடா!
அதிலொன்று ஜல்லிக்கட்டு
தடைசெய்வது பாவமடா!

ஜல்லிகட்டில் இறப்பதெல்லாம்
இறப்புக்கணக்கில் சேராது!
வீரன்விட்ட உயிர்தனதோ
உலகக்காற்றில் சேராது!

தியாகிகளின் பட்டியலில்
இவன்உயிரும் சேர்ந்தேதீரும்!
ஜல்லிக்கட்டில் இறந்தஉயிரோ
வீரக்காற்றில் கலந்தேதீரும்!

ஜல்லிக்கட்டின் விளையாட்டை
ஒலிம்பிக்கில் சேர்த்ததில்லை!
தங்கப்பதக்கம் தமிழ்பெறுமே
பயத்தில்தான் சேர்ப்பதில்லை!

தவறாமல் நேரத்தில்
பசிபோக்க வந்திடுவோம்!
காங்கேயன் கதறினால்
பதறியடித்து வந்திடுவோம்!

புடிச்சாலும் உதைச்சாலும்
புள்ளபோல வளர்கின்றோம்!
இன்னொன்று ஜென்மத்தில்
வாய்பேச வேண்டுகிறோம்!

எழுதியவர் : (16-Jan-17, 6:36 pm)
பார்வை : 896

மேலே