பெண்மையின் அழகு நடை உடை பாவனை பற்றி காதல் கவிதை

பெண்
கடவுள் படைத்த அற்புதமான
விஷயங்களில் ஒன்று...

பெண்
ஒவ்வொரு நிலையிலும்
அழகோ அழகு...

அவள்
சிரிக்கும் போது
மிக அழகாக தெரிவாள்
அனைவருக்கும்

அவள்
கோவப்படும்பொழுது
அழகு,
அவளின் நெருக்கமானவருக்கு

அவளது
நடையும் பேச்சும் அழகு,
அவளிடத்தில் அவள்
அளவுகடந்த நம்பிக்கை
கொள்ளும் போது

அவள்
பேசினாலே அழகு தான்
ஏனனில் அவளது
பேச்சில் கூட குயிலின்
சப்தம் கேட்கும்..

அவள்
அழகோ மிகவும்
மெச்ச கூடியது
அவள் புடவையில்
இருக்கும்போது...

அவள்
பாசமான பேச்சுக்கூட
மிக அழகு..

அவள்
குழந்தையாக மாறி
செய்யும் ஒவ்வொரு செயல்களும்
அழகு தான்..

மொத்தத்தில்
அவள் இருப்பதே
அழகு தான்..

எழுதியவர் : Umadevi.R (16-Jan-17, 9:17 pm)
பார்வை : 1069

மேலே