ஒற்றை இலை
வாழும் ஆசை விட்டதோ
பற்றின்றி விழுகிறது
ஒற்றை இலை..
சிறு காற்றுக்கா
பெரும் புயலுக்கா
எதற்கு கோபம் இந்த இலை மேல்?
மண்ணை நோக்கி விழும்போதும்
ஆடிக்கொண்டே விழுவதேன்
ஒற்றை இலை..
காற்றின் தூளி ஆட்டத்தில்
தூங்கியபடியே மண்ணை அடைந்தது
ஒற்றை இலை..
குடும்பமே இதற்காய் கண்ணீர் வடிக்க
தன் மரவாழ்வு விட்டு
தவவாழ்வு காண விழுகிறது ஒற்றைஇலை..
மரத்திலிருந்து போது எவர் கண்ணிலும் படவில்லை
கீழே விழுந்தவுடன்
எறும்புகளுக்கு குடையானது ஒற்றை இலை..
தன்னை பெற்ற தாயை
காலடியில் விழுந்து வணங்கியது
ஒற்றை இலை..