அடடா அவள் தேவதை

புன்சிரிப்பு அதிகம்
அன்பு அதைவிட அதிகம்
கோபம் துளியுமில்லை
மென்மையான பேச்சு மட்டும்..

பார்வையில் அன்பு மட்டுமே
செய்கையில் அது தெரியுமே
முகச்சுளிப்பில்லை வசவுகள் இல்லை
முகம் பார்த்தாலே கோபங்கள் மலையேறும்

தானாய் உதவும் பண்பு
வஞ்சகமாய் பேசுவோருக்கு சுட்டெரிக்கும் பார்வை
இயல்பாகவே இந்த குணமோ
பார்ப்போரும் சந்தேகிப்பர்
இப்படியும் ஒரு மனிதப்பிறவியாவென...

பார்க்கும் தொழிலில் நேர்த்தி
பேசும் பேச்சிலேயே நலம் அடைந்ததாய் உணர்வர்..
செவிலியர் எல்லோரும் இப்படியே..
இவர்கள் நிச்சயம் தேவதைகளே..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Jan-17, 9:47 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 111

மேலே