சுகந்தம்
வீதி நெடுகிலும்
மலர்கள்
குளிர்ச்சியான
மண்
காற்று
சாரல்
கைகள் பிடித்து
நடக்கின்றேன்
வார்த்தைகள்
எதுவுமில்லை
மௌனங்கள்
சுமந்த பொழுகள்
நம் புரிதல்
கணகளில்
தெரிகிறது
பேச்சு
மறைகிறது
இடைவெளிகள்
பெரிதாக இல்லை
இருப்பினும்
உள்ளே புகுந்து
வெளிவந்த
காற்று
சாலை தொடர்கிறது
பயணங்கள்
தொடர்கிறது
வயது முதிர்கிறது
புள்ளியை நோக்கி...