வாழ்வில் பிறந்த முத்தொளி

எங்கே தான் போனாயோ சொல்லாமலே,
நீயின்றி நானும் இங்கே இல்லாமலே,
என்னதான் செய்வதோ புரியவில்லை,
ஏனோ தவிக்கிறேன்
புரியாமல் இருக்கிறேன்..!!!



முன்னும் பின்னும் உன்னை எண்ணி நடந்தேன்,
கால்கள் பின்னிக்கொண்டு விழுந்தேன்,
கண் இருந்தும் இல்லை உணர்ந்தேன்,
இது புதிதாய் வந்த நோயா..??
இல்லை என்னைப் பிடித்தப் பேயா..??
யாரோ எவரோ உன்னைப் பற்றிச் சொல்ல,
என்னுள் காதல் பற்றிக் கொள்ள,
உயிர் இருந்தும் எங்கோ செல்ல,
நான் உன்னுள் வந்தேன் மெல்ல,
இது தானே நடந்த மாற்றம்..!!!




காற்றும் பூவும் உன்னைப் போல இருக்க,
தினம் என்னை நானே வெறுக்க,
முடியவில்லை உன்னை மறக்க,
இது யார் செய்த பிழையோ,
இப்படி இருப்பதுதான் என்நிலையோ..??
நீயே என்வாழ்வில் பிறந்த முத்தொளி !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jan-17, 2:26 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 66

மேலே