விழித்தெழு தமிழா

குன்றாத தமிழினம் மன்றாடுவதா...?

அமைதிப் பேரணிதான் நடக்கின்றது தேசியமே
அத்துமீறிட நொடிப்பொழுது போதும் எங்களுக்கு...

கற்றுக் கொடுப்பதே எங்கள் தமிழினம்தான்
கற்பிக்க எண்ணாதே உம் மாயச் சூத்திரங்களால்...

களத்திலுள்ள காளைகளெல்லாம் அயர்ந்துபோய் கண்ணுறங்குமென கடுகளவும் கனவுகாணாதே
நிலம்பதித்த கால்களெல்லாம் உங்கள் வெற்று நிபந்தனைகளுக்கு என்றுமே உட்படாது...

தலைகளை பலவீழ்த்தி தடைகளைத் தகர்ப்பது எங்களது நோக்கமல்ல
பிழைகளை திருத்தி எங்களது உரிமைகளைத்தான் திரும்ப கேட்கின்றோம்...

ஆணை பிறப்பித்தால் மட்டுமே ஆட்சி வலுப்பெறும் அரசு
அறிவீனச் செயல்களுக்கு என்றும் கொட்டிடாது எங்கள் போர்முரசு...

இளைஞர்களின் பட்டாளம் பாரெங்கும் எழுந்துநிற்பதை பாரீர்
துளைத்தெடுக்கும் செம்மொழியில் உரைநடையில் குரல்கொடுக்க வாரீர்...

இளைஞர் சமுதாயம் தலைத்தோங்கட்டும்
மாணவர்கள் பட்டாளம் அணிதிரளட்டும்...

மாறான கருத்துக்கள் மறுதலிக்குமேயானால்
தோதாக அரசியலை மாற்றியமைப்போம் தனிநாடாக...

" வாழ்க தமிழ் "

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (18-Jan-17, 7:51 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : vizhithelu thamila
பார்வை : 394

மேலே