ஐம்பூதம்

மழை போல் நீயும்
என் மனதை நனைக்கிறாய்
வெயில் போல நீயும்
வாட்டி வதைக்கிறாய்
தீ போல கண்ணில்
சுட்டும் எரிக்கிறாய்
காற்றாய் மாறி
எனைத் தீண்டி நீயும் செல்கிறாய்
வானம் போல
என்னுள் என்றும் நீயே இருக்கிறாய்
ஐம்பூதமாகி என்னை
நீ காதல் செய்கிறாய் ....

எழுதியவர் : கிரிஜா.தி (18-Jan-17, 10:06 pm)
சேர்த்தது : கிரிஜா தி
பார்வை : 239

மேலே