ஏறு தழுவும் தமிழன்

வீர தமிழனின்
வீரம் நீ
நீ உழைக்க நாங்கள் -வாழ்க்கை
நடத்திய காலங்கள் ஏராளம்
நான் உண்ணும் ஆகாரம்
சத்தாக மாற காரணம் நீ
உன் ரத்தம் தந்த சுத்தம்
தர மறுக்கும் மேலை நாட்டு உணவு
எங்களின் அடையாளமும் நீ
காளையாய், பசுவாய் பார்ததில்லை
கடவுளாய், பிள்ளையாய் மதிக்கின்ற நாங்கள்
பண மோகத்தில் அறியவில்லை - உன் பெருமையை
சில மனித மனம்.
விவசாயத்தின் பெருமையும் நீயே!
விவசாயின் அன்பும் நீயே!
ஆதரவு அளிக்க நாங்கள் தயார்
அடையாளமான உன்னை மீட்க....
எங்கள் உயிர் மறந்தது எங்களை
உன்னை நேசித்த பின்.....

-மூ.முத்துச்செல்வி
----------------------------------------------------------------------------------------------------------------------------
விவசாயம் செழிக்க வேண்டும்
ஏறு தழுவுதல் நடக்க வேண்டும்
இயற்கை காக்கப்பட வேண்டும்
மீட்ப்போம் புதிய தமிழகத்தை

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (18-Jan-17, 10:24 pm)
பார்வை : 1629

மேலே