உரிமைக்குரல்

ஊரோர் சபைதனிலே
உலகாளும் மன்னவன்முன்
உரிமைக்குரல் தருகின்ற
உன்னதத்தின் கண்ணகியை
உறவாகப் பெற்றெடுத்த
உறையுளாம் தமிழகம் !


சிலம்பு உணர்த்தும்நீதி
சிந்திக்க வேண்டியநீதி
சிறப்புமிக்கக் கற்புக்கரசியை
சிறப்பிழந்த மன்னன்முன்
சீறிப்பாய வித்திட்ட
சிங்கத்தின் வீரகர்ஜனை !


மன்னவனே ! மனுநீதி இழந்தவனே !
மாசற்றப் பெண்மணி நான் !
மக்களை ஆளும் நீயோ நீதியை
மறந்து நேர்மையை
மறந்து என்கணவன் கள்வன் என்கிறாய் !
மரபான நீதி பிறழ்ந்ததே!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Jan-17, 11:33 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 241

மேலே