விருதகள் வெளிச்ச இருள்

கொண்டாடியவர்களை
மீண்டும் மீண்டும்
கொண்டாடுங்கள்.

மகுடம் சூடியவர்களுக்கு
மீண்டும் மீண்டும்
மகுடம் சூட்டுங்கள்.

அவரவர்க்கான காரியங்களை
சாதித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கைதட்டல்கள்
எங்கள் நெஞ்சங்களில்
இடி ஓசையாய்
இறங்குகிறது.

ஆயாசமாகவும்,ஆபாசமாகவும்
இருக்கிறது.

சூரியன்களுக்கு கதவடைத்த
சூச்சுமர்கள் நீங்கள்.

கேளுங்கள் துரோகிகளே!
கிணற்றுத் தவளைகள்
வெளிவந்து
வெகுகாலம் ஆகிவிட்டது.

உங்கள் “அரசியலும்”
உங்களுக்கான மரியாதையைக்
கீழே தள்ளி விட்டது.

ஒரு வெளிச்சம்
இருளானது
ஊடகத்திலும்!

எழுதியவர் : கனவுதாசன் (19-Jan-17, 11:53 am)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 64

மேலே