ஜல்லிக்கட்டுக் காளையின் அறைகூவல்

புத்தகக்கட்டில் முகம் புதைத்த மாணவர்களே!
புத்தம்புதிய போராட்டம் வெற்றிபெற

ஜல்லிக்கட்டில் காளையெங்கள் துயர்துடைக்க வாருங்கள்...
வில்லெடுத்துப் போர்தொடுங்கள் வெற்றி பெற

கட்டிடப் பரப்பில் வாசம்செய்யும் மாணவர்களே
கட்டான தேகத்துடன் உரிமைகுரல் கொடுக்கவாரீர்.

படித்துவிட்டு வேலையில்லையென்று சொல்லாதீர்கள்!
படிக்காது உழைக்கும் நாங்கள்போராட வேலைதருகிறோம்

இரைப்பைநிரப்ப இரத்தம்சிந்தும் எங்களுக்காக
இனமான எழுச்சிபொங்கப் போராட வாருங்கள்!

உங்களுக்காக வண்டியும் ஏரும் செக்குமிழுத்தோம்
எங்களுக்காக அரசியலை இழுக்காதீர்கள் எழுச்சிகொள்வீர்!

எங்களுழைப்பால் உங்கள்உலை கொதிக்கும் போது...
எங்களுக்கோர் இழுக்கென்றால் உங்களிரத்தம் கொதிக்கும்.

முகம்மூடியிருந்த களைப்பை மறைத்துவிட்டு...
சமூகம் விழிப்பைப்பெற ஓசையெழுப்பிக் குரல்கொடு!

தடுமாற்றமில்லா அமைதிப் போராட்டம் வெற்றிபெற
கொடுத்து உதவுங்கள் உங்கள் ஆதரவை

வாடிவாசலுக்கு வந்துபாரெங்கள் வேகத்தை...
வாடிய உங்கள் முகம்கூட பிரகாசிக்கும்!

ஈராண்டாய் விளையாட்டில்லை தினவெடுத்த திமில்
போராடி வெற்றிபெற பலத்தைக் கொடுக்கும்!

உன்னால் முடியவில்லை என்றொருசொல் போதும்...
உடனே தடைகளைமுட்டி வேரொடு சாய்க்கிறோம்

ஏறுதழுவ போராடும் இப்போராட்டம் வரலாற்றில்
வீறுகொண்டு எழுந்து சிலையாய் நிற்கும்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (19-Jan-17, 3:23 pm)
பார்வை : 2357

மேலே