தமிழன் என்று சொல்லடா

ஜல்லிகட்டைப் போன்று வீர விளையாட்டு
ஏதேனும் இவ்வுலகில் உண்டோ !
தமிழர்களின் வீரம் போல்
வீரமிக்கோர் யாரேனும் உண்டோ !
காதலும் ,காமமும் மட்டுமல்லடா எங்கள் காவியங்களில் ,
வீரமும் தீரமும் கூட கலந்துள்ளது எங்கள் குருதியில் ,
ஜல்லிகட்டை சங்க இலக்கியங்களும் போற்றியது தனது வரிகளில் ,
எங்களது குரல் கேட்கவில்லையா உங்கள் செவிகளில் ,
இந்தியன் என்ற சொல்லில் ஏதடா புதுமை
தமிழின் பழமையை கேட்டுப்பார் ,தெரியவரும் அதன் பெருமை,
தடை செய்தால் ! படையோடு வருவோம் !!!

எழுதியவர் : (19-Jan-17, 4:24 pm)
சேர்த்தது : மதியழகன்
பார்வை : 73

மேலே