நம்பிக்கை வை ஜல்லிக் கட்டு மீண்டும் வரும் -குடு குடு பாண்டி வாக்கு

நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
தமிழா நல்ல காலம் பொறக்குது
கலங்கிடாதே, நீ தலை நிமிர்ந்து நின்னுடு
உனக்கு நல்ல காலம் பொறக்குது
நான் இந்த பாண்டி
குடு குடு பாண்டி
சொல்லுவேன் இந்த
அதி காலை வேளையிலே
அந்த ஜக்கம்மா சத்தியம்
என் சொல்லு சத்தியம்

குடு குடு குடு குடு .............

நம் செந்தமிழ் நாட்டிலே
ஜல்லிக் கட்டு மீண்டும்
வந்திடும் கலங்காதே
காளையர் வீரமாய்
காளையை அடக்குவர்
தமிழ்க் குடி வீரத்தை
நிலை நாட்டுவர்
தமிழன் ஒற்றுமையை
அமைதியாய் சாந்தி நிலவ
நிலைநாட்டுவர்


நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
தை பொங்கல் திருநாளில்
அதற்க்கு கடுத்த நன்னாளில்
இனி மீண்டும் ஜல்லிக் கட்டு
களைக் கட்டும் நம்பிடு

இது இந்த பாண்டி வாக்கு
குடு குடு பாண்டி வாக்கு
என் குலதெய்வம் ஜக்கம்மா வாக்கு
நம்பிடு

குடு......குடு.....குடு ...குடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jan-17, 11:50 am)
பார்வை : 110

மேலே