இயற்கையை அழிப்பவனே

இயற்கை, இது மாற்ற வல்லது !
மனிதா .......
மழலை பருவம் மகிழ்வாய் வரும்
இளமை என்னும் பருவம் இடையில் வரும்
பக்குவம் வாய்ந்த பருவம் பாய்ந்து வரும்
முதுமை என்பது முந்திக்கொண்டு வரும்
இதுபோன்ற இயற்கை மாற்றம்
உனக்கு சொல்லவில்லையா? மனிதா!!!!
இயற்கை என்பது மாற்ற இயலா மகத்துவம் என்று!
மனிதனின் இயற்கை மாற்றத்தை உன்னால் மாற்ற முடியுமா ?
முதுமையை விரட்டி விட்டு, இளமை அருகில் வருமா?
சாத்தியமா?
பின்பு எதற்கடா
இயற்கையை உரசுகிறாய்
நீ அழிப்பது இயற்கையை மட்டுமல்ல
இறைவனின் கடைசி பிள்ளையை!
மரத்தை வெட்டும் முன் நீ யோசி
அதில் ஒரு துண்டு விறகு உனக்கானதோ என்று
நிச்சயம் உன் கை ஒங்காது
மரத்தின் முன் .........................

எழுதியவர் : Taara (20-Jan-17, 4:00 pm)
சேர்த்தது : தாரா சுரேஷ்
பார்வை : 206

மேலே