ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பொங்கலுக்குள் அனுமதித்து இருந்தால்
பொங்கி இருக்க மாட்டார்கள்
மாணவர்கள் !

உச்ச நீதிமன்றம்
உச்சம் இழந்தது
அவமானமே மிச்சம் !

மக்கள் எழுச்சியால்
மண்டியிட்டது
பீட்டா !

அயல்நாட்டுக் குளிர்பானம்
விரட்ட உதவிய
பீட்டாவிற்கு நன்றி !

இப்படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
மிரட்சியில் அரசியல்வாதிகள் !

ஏறு தழுவுதல் என்பதை
மிருகவதை என்போர்
மூடர் கூட்டம் !

ஆட்டம் கண்டது
ஓட்டம் எடுத்து
பீட்டா !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (20-Jan-17, 7:13 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 157

மேலே