இயற்கையின் சிறப்பு

#காற்று...

தன்னை மாசுப்படுத்துகிறான் மனிதனென்று தெரிந்தும், இயங்கி வருகிறது
சுவாசக்காற்றாய்...

#நிலம்...

தன்னை தோண்டுகிறான் மனிதென்று தெரிந்தும்,
தாங்கி நிற்கிறது தரையாய்....

#சூரியன்...

தன்னை இழிந்துரைப்போருக்கும் சேர்த்து தான் தன் ஒளி கொண்டு ஒளிச்சேர்க்கையால் பிரசவிக்க வைக்கிறான்
உணவை....

இப்படி இயற்கையில் ஒவ்வொன்றும் பல சிறப்புகளை பெற்றிருந்தாலும்,
இந்த அறிவுஜீவி மனிதர்களைப் போல் தற்பெருமை பேசித்திரிவதில்லையே...
இதனால், தானோ,
இயற்கையே தெய்வமென்று பொற்றுகிறார் இளங்கோவடிகள்??....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Jan-17, 9:26 am)
Tanglish : iyarkaiyin sirappu
பார்வை : 4606

மேலே