அறவழிப்போராட்டம்

அறவழிப்போராட்டம்..!!
அகிலம் வியக்கும் அற்புதப்போராட்டம்..!!
அரசாங்கமே அதிர்ந்து போகும் போராட்டம்..!!

அச்சம் விடுத்து உச்சம் தொடும் காளைகள்
அசராமல் நிற்கிறார்கள்..!!
அசந்துபோய் நிற்கிறார்கள் அரசியல்வாதிகள்..!!

கண்டுகொள்ளாமல் இருந்தால் கலைந்துவிடுவார்கள் என்ற எண்ணம் போலும்..!!
காளைகளை அடக்கும் காளைகள் நாங்கள் காணாமல் போய்விட மாட்டோம்..!!
நிரூபித்தது இப்படை..!!

சந்ததியை கண்டு சலித்துக்கொண்டவர்களெல்லாம்
சங்கடப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
சலிக்காத போராட்டம் கண்டு..!!

வெல்லட்டும் தமிழன்..!!
வன்முறை இல்லாமல் வாழட்டும் தமிழ்..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (21-Jan-17, 1:18 pm)
பார்வை : 182

மேலே