பிறந்தேன் புது மனிதனாய்

மாட்டினை கருவூட்ட சினைஊசி பயன்படுத்தி
மாபெரும் லாபம் இயற்ற எண்ணினேன்
சினைஊசி விலையோ ஐம்பது ரூபாய்
சினைக்காக காளையிடம் நூறு ரூபாய்
சினைஊசி போடுபவர் வீடுதேடி வந்தார்
காளைக்காக செல்லவேண்டும் பசுவுடன் மூன்று கி.மீ.
சினைஊசியில் கருவூட்டல் ஒருமுறையில் முடியும்
காளையிடம் செல்லவேண்டும் இரண்டுமூன்று முறை
பாலிலே இரண்டு ரகமுண்டு அறிந்தேன்
ஒன்றோ நாட்டுப்பால் மற்றொன்று கலப்பினமாட்டுப்பால்
உணவே மருந்தானது பாரம்பரிய நாட்டுப்பால்
பிணிகள் வந்தேரும் கலப்பின மாட்டுப்பால்
சினைஊசி மூலம் உருவானதே கலப்பினமாடு
பிணிக்கான விதையை விதைதான் சினைஊசியிலே

ஐயகோ! என்வருங்கால சந்ததிக்கு தீங்கிழைத்திட்டேன்
இலாபத்தை மட்டும் நோக்கி அறிவிழியானேன்
இம்மூடன் கண்திறந்தனர் இன்றய இளைஞர்படை
ஏறுதழுவுதல் எதற்கு என்று உணர்ந்தேன்
உலக மயமாக்கல் சதிகளை அறிந்தேன்
எம்இளைஞர் போராடியது கலாச்சாரம் காக்க
கற்றுக் கொண்டேன் கலாச்சாரம் எதற்காக
வலியது மருத்துவ வர்த்தகம் என்றுணர்ந்தேன்
உறங்காமல் போராடினீர் தமிழினம் காக்க
உங்களால் பிறந்தேன் புது மனிதனாய்

எழுதியவர் : செங்கோட்டையன் (22-Jan-17, 3:38 am)
சேர்த்தது : செங்கோட்டையன்
பார்வை : 85

மேலே