எதை பறைசாற்றுகிறதோ

இயலாதவர்
அங்கங்கள் சரிவர
இயங்காதவர்,
பெரியவரென்றாலும்
பரிவையும், பாசத்தையும்
இழந்தவர்

உழைத்து ஓடாகி
உயர்த்திவிட்ட பிள்ளைக்கு
பாரமாகிப்போனவர்,
சக மனிதர்களால்
சரி சமமாய்
மதிக்கப்படாதவர்

மனைவி மாண்டபின்
தனக்கு தானே
எல்லாமுமாகி
ஏக்கத்தோடு வாழ்பவர்
மரணத்துக்குக் காத்திருக்கும்
முதியவர்

வறுமையின் கொடுமையால்
முதுமையின் வலிகளை
சுமந்துகொண்டு,
பசிபோக்க படும்பாட்டை
பார்க்கும்போது
நெஞ்சு கனக்கிறது

பாரத தேசத்தில்
பெரியவர்களுக்கு மரியாதை
பாரம்பரிய பண்பாடு,
அவர்களின் ஆசிர்வாதம்
இறைவனின் அநுக்கிரகமென
எதை பறைசாற்றுகிறதோ?

எழுதியவர் : கோ. கணபதி. (22-Jan-17, 8:57 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 54

மேலே