வழிபட்டால் தவறுண்டோ

வாழும் காலங்களில்
கற்கக் கற்றான்,
கற்கக் கற்கத்தான்
கல்லாதது உலகளவென—மனிதன்
புரிந்து கொண்டான்

படைத்தது பரமனென்றால்
புவி வாழ் மக்களெல்லாம்
சமமில்லையோ!
இளமையில் சிலர் கல்லாமை
இறைவனின் இயலாமை தானே!

அறிவையும் ஆற்றலையும்
தருகின்ற புத்தகத்தைத்
தெய்வமென போற்றி
வணங்கி வழிபட்டு—மனிதன்
அறிவை வளர்த்துக் கொண்டான்

காலம் மாறும்போது
அறிவு தந்த இறைவனை
வேதங்கள் மூலம்
வழிபட்டு அறிந்து கொண்டது
அன்றைய காலம்

இன்றைய பொழுதில்
அகிலத்து இறையோடு
மெய்ஞ்சான அறிவையும்
அள்ளித்தரும் கூகுளை
வழிபட்டால் தவறுண்டோ!

எழுதியவர் : கோ. கணபதி. (22-Jan-17, 8:59 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 49

மேலே