கத்தியின்றி ரத்தமின்றி

புற்றில் இருந்து

புறப்பட்ட ஈசல்களாய்

எம் இனம் வெளிப்பட்டதே

தம் உரிமை காக்க!

சத்தம் இன்றி, செத்துப்போக

புழு,பூச்சிகள் இல்லை,

நாங்கள்,என்றே உணர்த்த

தத்தம் வேளைகளை துறந்து

நித்தம்,நித்தம்,

யுத்தக்கலத்தில் தன் எதிர்பை

கத்தியின்றி,ரத்தமின்றி

பதிவு செய்வதை

பதவியாளர்கள்

பரிவுடன் கவனிக்க மறந்து

பரிதவிக்கவிடல் நியாயமோ?
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (22-Jan-17, 5:00 pm)
பார்வை : 238

மேலே