அதிகாரம் யார் கையில்

முதலில்
மாடுகளைப் பிடிக்கப் போகிறோம்
அடுத்து?

ஆளும் வர்க்கத்தை
நாம் கெஞ்சினோம் கேட்கவில்லை;
இப்போது
அவர்கள் கெஞ்சுகிறார்கள்...

வழியில்லை என்றீர்கள்
வலிமை இல்லையென நினைத்தீர்கள்.
வலிமை காட்டினோம்
வழி பிறந்தது.
கேள்வியும் பிறந்தது?

கேள்வி கேட்டோம்
பதில் சொன்னீர்கள்.
கூட்டம் காட்டினோம்
சரி சொன்னீர்கள்?
இதுவரை என்ன செய்தீர்கள்?

எழுதியவர் : கனவுதாசன் (22-Jan-17, 5:35 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 95

மேலே