உன்னை சந்தித்த என் விழிகள் 555

உயிரே...

இன்றுவரை நான்
கடந்துவந்த பாதையில்...

எத்தனையோ பெண்கள்
என் பார்வையில்...

என் விழிகள் வினாடிக்குமேல்
அவர்கள்மீது இல்லை...

உன்னை நான்
சந்தித்தபின்...

தொலைவில் வரும்
பெண்களைக்கூட...

நான் பார்க்காமல்
இருந்ததில்லையடி...

இருட்டில் கட்டிப்பிடிக்கும் இச்சை
என் பார்வையில் இல்லையடி...

என்னவள் உனக்கு இணையாக
பாவைகள் பூமியில் இருக்குமோ...

இந்த நிமிடம்வரை எனக்கு
தோல்விதான் என்னுயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-Jan-17, 8:18 pm)
பார்வை : 483

மேலே