ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு!!

காளையும் காளையும்
தழுவுவது கண்டு
பொருக்க முடியாமல்
பிரிக்கும் சதிதான்
மிருகவதையோ!!

ஆடு மாடை மிருகமாய்
அழைக்கும் வழக்கம்
தமிழக வறலாற்றில் -ஏன்
சங்க கால இலக்கியத்தில் கூட
இல்லையடா!!

கருணைகொலை செய்பவனெல்லாம்
காப்பாற்ற போகின்றானாம்!!

விவசாயி வீடு போயி பாரு
காளைய வளக்க படும்பாடு!!
ஆனாலும்
மிருகமில்ல எம் புள்ளனு
கர்வத்தோட முத்தமிடும்
பாசத்துக்கு ஏது ஈடு!!

கட்டித் தழுவி -ஆடிக்
களிப்பதைக் காட்டிலும்
வேறெதைக் கொண்டு
விவரிப்பேன் வதையல்ல
விவசாய தோழனின்
வீர விழா இதுவென்று!!!

# பா சூரியா.

எழுதியவர் : red (23-Jan-17, 1:14 am)
சேர்த்தது : சூரியா உதயன்
Tanglish : jallikkattu
பார்வை : 65

மேலே