காதல் கவிதை

இன்றுஎன் தலைவன் இல்லை சென்றுவா -- நிலா
பின்னரே அழைக்கப் பிசகாது வந்திடு - நிலா
மன்னவன் வரும்வழி வாராய் வெண்ணிலா .
உன்றனை நோக்கியே உருவாகும் காதலே !


காதல் கனியே கவிதை மலரே - நிலா
மோதல் இனியே முற்றிலும் வேண்டா .
மலரே உனையே மணமுடை மலராய்ப்
பலநாள் உணர்வாய்ப் பசுமை காதல் - நிலா



என்றும் உந்தன் நினைவினில் யானும்
உன்றன் பெயரை உள்ளம் எழுதி
இதயக் கூட்டில் இருத்தி வைத்துக்
கதியே நீயெனக் காதல் மலரும் - நிலா


காதல் நோய்க்குக் கன்னி நீதான் - நிலா
சாதல் இல்லாச் சாகா மருந்து .
ஊடலும் காதலில் ஒருவகை அன்றோ ?
தேடலில் யானும் தேவனைக் கண்டேன் .



ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jan-17, 2:48 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 234

மேலே