கலவரத்துறை

உன்னை எங்கள்
நண்பன் என்றாய்.....
நண்பனா கொடுரமாய்
தாக்குவான்...
நண்பனா தடியெடுத்து
அடிப்பான்.....
உரிமையோடு அவன்
அடித்தாலும்...
அவனுக்கு உள்ளம்
இருக்குமடா.....
அதிகார திமிரினால்
அடித்தாயே...
உன் உள்ளமென்ன
கல்லாடா......
காவல்துறையாய் எங்களை
காக்து நின்றீர். - நேற்று
கலவரத்துறையாய் எங்களை
கலங்க வைத்தீர் இன்று..
எங்கள் நெஞ்சில் அழியாத கோடுகள் நீங்கள்.
கலவரத்துறையே......

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (26-Jan-17, 2:25 pm)
பார்வை : 187

மேலே