ஸ்ஸ்ப்பா முடியல

அண்ணனும் தம்பியும் பேசிக் கொள்கிறார்கள்...

தம்பி:- ஜல்லிக்கட்டும், கல்யாணமும் ஒன்னா அண்ணே?

அண்ணன்: - அட ஆமா தம்பி.

தம்பி:- எப்படினு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே!

அண்ணன்:- அட தம்பி இந்த ஜல்லிக்கட்டில் காளையின் கொம்பால் குத்துப்பட்டு இறந்தாலும் ஒரு தரம் தான் இறப்பு..
ஆனால், இந்த கல்யாணத்துல தாலி கட்டிக் கொண்டு பொம்பளைய வாயில திட்டுவாங்கி தினமும் சாகணும்...

தம்பி:- சூப்பருங்கண்ணே. அதான் நீங்க கல்யாணமே வேண்டாமென்கிறீர்களோ?

அண்ணன்:- ஆமா தம்பி. ஆணின் நிம்மதியைப் பறிக்க வரம் வாங்கி பிறந்தவர்கள் இந்த பெண்கள். இவர்கள் மனதிலெண்ணினால் மன நிம்மதி இருக்காது..
பெண்களை வணங்கிறேன்..
கோவில் கட்டிக்கூட வைக்கிறேன்.
ஆனால் என்னையாளும் உரிமை தர மாட்டேன்.

தம்பி:- ஸ்ஸ்ப்பா முடியல..

அண்ணன்:- தம்பி அண்ணன் சொன்ன மாதிரியே வாழ்ந்து காட்டுகிறேன். பாரு..

தம்பி:- பார்க்கலாங்கண்ணே!

அண்ணன்:- பார்க்கத்தான் போறே!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Jan-17, 4:46 pm)
பார்வை : 956

மேலே