நினைவில் நிறைந்து
காலை மலர்வதும்
மாலை உதிர்வதும்
கண்மணியே
உன்நினைவில் தான்.....
உன்னை மறப்பேன்
என்பதை
மறந்துவிடு.....நான்
மரணிக்கும் வரை
தொடரும் என்பதை
ஒரு ஓரமாய்
குறிப்பில் வைத்துவிடு.....
ஏதேதோ வலிகளை
என்னுள்
திணித்துப் போனாய்....
எவருக்கும்
தெரியாமல்
நான்.... தனித்துப்
போனேன்.....
பாவம் பரிதாபம்
எல்லாம்
எனக்கு வேண்டாம்.....
யார் போட்ட
சாபம் என்றுதான்
புரியாமல்
புலம்புகிறது
தம்பு மனம்......
மரணித்து இருந்தாலும்
மணி நேரத்தில்
சோகம் தொலைந்து
இருக்கும்.....வாழ்வதால்
மணி நேரமெல்லாம்
வலிதரும்
சோகம்தான்
மிச்சமாச்சு......
பெண்ணே நீ
தரும் மௌனங்கள்
உனக்கு நிம்மதி.....
எனக்கில்லையே.....என்
கிழக்கில்
உதயம் இல்லை....உன்
இதயத்தில்
இவன் இல்லாத
போது......
தென்றலும்
தீயும்
ஒருசுகமாய்
தீண்டியது.....
ஒவ்வொரு கணமும்
உன்நினைவு
என்னைச்
சிதைத்தது.....
உதயம் தேடும்
சூரியகாந்தியே
உன்னைத்தேடி
வாடும்
இதயம் இங்கிருக்கிறேன்....
ஒருமுறை
திரும்பிவிடு.....
காலங்கள்
விரையும்
கோலங்கள்
அழியும்.....
நினைவில் நின்ற
நினைவுகளும்
மாறிவிட நினைக்கும்
நினைத்துக்கொண்டே......
விழியெல்லாம்
உன்
விழிதான்.....கண்ணில்
வழிவதெல்லாம்
கண்ணீர் அல்ல....
வலிகளின் வரிகள்....
நினைவு ஏட்டில்
எழுதி வைத்து
நினைவூட்டிக்கொள்ளும்
காதல் அல்ல
என் காதல்.....எவராலும்
அழித்திடமுடியாத
காதல்.....!!!
நெஞ்சில்
வைத்து
வாழ்கிறேன்....
அதில்
நஞ்சு வைத்தா
போவேன்....????
கண்ணே மணியே
என் கண்ணுறக்கம்
களவு போனதே....
காதல் தான்
உளவு போனது....
கண்டுவந்து
காரணம்
நீதான் என்று
செய்தி தந்தது......!!!
மறந்து போக
நினைத்தேன்.....
மறுபடியும்
மனசில்
நின்று
துடித்தேன்.....தோல்வியில்
நின்று
சிரித்தேன்.....தொலையாத
நினைவுகள்
ஆறுதலாய் ஆனதால்......!!!!!