நீயா நானா

அநீதியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நீயா நானாவென்னும் மனப்பான்மை கண்டு வியக்கிறேனே...

ஒற்றுமையாக இருக்கும் கணவன், மனைவியிடையே நீயா நானாவென்னும் பனப்பான்மை வந்துவிட்டால், நல் இல்லறமும் ஒரு போர்க்களமாகுமே....

ஒற்றுமையாக வாழும் சகோதரர்களையும் விரோதிகளாய் மாற்றுமே...

பலர் தங்களுடைய சந்தோஷமான, அமைதியான வாழ்வைத் தொலைத்து துன்பத்தில் தவிப்பது இந்த நீயா நானாவென்னும் மனப்பான்மையாலே...

உண்மையை வெளிக்கொணர நீயா நானாவென்னும் போராட்டத்தை மேற்கொள்கிறீர்களா??..
அப்படியெனில் நீங்கள் காணப்போகும் உண்மை ஒன்றே...
அவ்வுண்மையாதெனில் வாய்யே வெல்லும்...

உண்மைக்கு நடிக்கத் தெரியாது..
அது இயல்பாகவே வெளிப்படும்...

உலகம் போகிற போக்கில் நீயா நானாவென்பதே பெரும் யுத்தமாகுமே...

வாழப் போவது நீயா? நானா??
சாகப் போவது நீயா?
நானா??
என்றெல்லாம் விவாதங்கள் நடத்தும் வேளையும் நெருங்கிவிட்டதே...

பிறருடைய வாய்யை வேடிக்கைப் பார்த்தே தனது பகுத்தறிவை இழந்த,
இன்னும் இழந்து கொண்டிருக்கும் மனிதர்களே!
நீங்களெல்லாம் என்றுதான் திருந்துவீர்கள்...

மேடையில் சத்தியவான் வேஷமிட்டவனுக்கு மாலை மரியாதை...
வாழ்க்கையில் சத்தியவானாக வாழ்ந்தவனை இங்கு யாரும் கண்டுக்கவில்லை..
இதன் பிறகும் நீங்கள் திருந்தவில்லையென்றால் போட்டு பாருங்கள் நீயா நானாவென்னும் யுத்தம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Jan-17, 8:05 pm)
Tanglish : neeyaa NANA
பார்வை : 582

மேலே