அன்புமணி-டாக்டர் நஞ்சுண்டேஸ்வரன் உரையாடல்

அன்புமணி : (டாக்டர் நஞ்சுண்டேஸ்வரன் க்ளினிக்குக்கு வேகமாக
வருகிறான் அலறி அடிச்சிண்டு)

டாக்டர் , டாக்டர் , என் நெஞ்சு வலிக்குது டாக்டர்
ரொம்ப வலிக்குது டாக்டர் ...................ஏதாச்சும்
பண்ணி வலிய நிப்பாட்டனும் டாக்டர்............

(அன்புமணியை பல ஆண்டுகள் தெரிஞ்ச டாக்டர் கூறுகிறார் என்னன்னு கேளுங்க )

டாக்டர்நான் நஞ்சுண்டேஸ்வரன்: டேய் அன்பு , எப்போதும் இந்த சந்தி நேரத்துல
ஒன்ன டாஸ்மாக் வாசல்ல தானே பார்ப்பேன்
இன்னிக்கு என்ன இந்த பக்கம்

அன்புமணி : ஐயோ டாக்டர் நான் கூவினது உங்களுக்கு
கேக்கல போல தோணுது ஐயா ............
நான் இப்போவும் அங்கேந்து தான் வரேன் டாக்டர்
நெஞ்சுவலி தாங்கல ஓடி வந்தேன் (நெஞ்சை பிடிச்சிக்கறான்)

டாக்டர் : டேய் அன்பு, நீ எவ்ளோ சொல்லியும் திருந்தல, இப்போ
பாரு நீ இத்தனை நாள் போட்ட நஞ்சு நெஞ்சு வலில
கொண்டு தள்ளிடிச்சு ..................!!!!!!!!!!!!!!!!

அன்புமணி : ஐயா , டாக்டர் ஐயா , நீங்க அப்படி சொல்லலாமா
நீங்க நஞ்சுண்டேஸ்வரர் ஆச்சே , என்னுள் புகுந்த
நஞ்சுக்கு மருந்து தாங்க ஐயா, என்னைக் காப்புதுங்க ஐயா
உங்களுக்கு தெரியும் நான் புள்ளகுட்டிக்காரன் ............!!!!


டாக்டர் : டேய் அன்பு, இந்த நஞ்சுண்டேஸ்வரன் என்ன அந்த
நஞ்சுண்டேஸ்வரனே வந்தாலும் இனிமேலும் நீ
தண்ணி அடிச்ச உன்ன காப்பாத்த முடியாது ..........!!௧

இனிமே தண்ணி அடிக்கமாட்டேனு உன் தாய் மேல்
சத்தியம் பண்ணி கொடு மருந்து தரேன் இப்ப
சுகம் ஆயிடுவ .................


அன்புமணி : ஐயா உங்கள் மேல் சத்தியம், என் தாய் மேல் சத்தியம்,ஏ
என் பொஞ்சாதி, பசங்க மேல சத்தியம் இனிமே அந்த
டாஸ்மாக் பக்கம் போமாட்டேன், குடிக்க மாட்டேனுங்க

(வலில விக்கி விக்கி அழுவறான்)

டாக்டர் : டேய் அன்பு, இப்போ போட்ட ஊசில நீ பொழச்சிகிட்ட,
சொன்னபடி நடந்துக்க, அந்த ஆண்டவன் காப்பாத்துவான்
குடிச்சவன் பேச்சு விடிஞ்சா பொச்னு இருந்த ஒன்னும் செய்ய
முடியாது இந்த நஞ்சுண்டேஸ்வரன் கூட .............!!!!!!!!!!!!!!!!!!!


அன்புமணி : ஐயா தெய்வமே இனி அந்த பக்கம் போமாட்டேன்

இது சத்தியம் ............!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jan-17, 4:49 pm)
பார்வை : 163

சிறந்த நகைச்சுவைகள்

மேலே