கனவு
என் கனவு சாம்ராச்சியத்தில் ;
நேர்பட பேசும் நபர்கள்
கைமாறு எதிர்பாராத சகா
முதுகில் குத்தாத துரோகி ....
நன்மை வாசனைகளை
விதைக்கும் பூக்களாக
சில நண்பர்கள் ...
எனக்கான வெற்றி ஏணியை
மகிழ்ச்சியாய் சுமக்கும்
சொந்தபந்தங்கள் ...
முடிசூடிய மகாராணியாய்
நான் நகர உலா வர ....
என்னை ஏமாற்றிய
உள்ளங்கள்
வலி நெடுக
பன்னிர் தெளிக்கிறது ...
துன்பங்களுக்கும்
மனா உலைச்சல்களுக்கும்
வெடி வைத்து
தகர்த்து எரிந்து
நிம்மதியாக நான் ...
அலைக்கழித்தவர்களும் ,
கண் முன்னே சிரித்து,
புறம் தள்ளி
ஜாடை பேசியவர்களும் ,
உதடுகளில் சிரிப்பை சேமித்து ,
மலர் கொத்துகளுடன்
என் அரண்மணை
வாயிற்படியில்
வரிசைகளாய் அணிவகுத்து ...
வாழ்கை சக்கரம்
அதன் போக்கில் சுழலட்டும் .
எவற்றிற்கும் களங்கப்போவதில்லை.
என் வாழ்க்கைக்கு
இல்லையெனினும் ,
என் கனவுகளுக்கு
உண்டு முழு சுதந்திரவுரிமை.