இயலாமை
உன் நினைவுகளை
தவிர்க்க இயலவில்லை..!!
என் உணர்வுகளை
தடுக்க முடியவில்லை..!!
என் குணமறிந்தும்
உன் மனம் மாறவில்லை..!
உன் அகமறிந்தும்
என் மனதில் மாற்றமில்லை..!
தேடும் என் கண்கள்
தொலைந்ததிங்கே..!!
வாடும் என் மனம்
நீ அறிவதெங்கே....???