உடல்நலமில்லையெனக்கு

அனல் என்னை அணைத்துக்கொண்டிருக்க
என் தேகம் எரிந்து கொண்டிருக்கிறது..!

உயிரைத்தவிர உடன் எவருமில்லை..!
உமிழ்நீரும் உதவ வரவில்லை..!

விழியிரண்டும் விம்மிக்கொண்டிருக்க
மொழிவாரது எதையோ முனகிக்கொண்டிருக்கிறேன்..!

என் உணர்வுகள் ஏனோ உறைய மறுக்க..!
என் சிரமமறிந்து சிரம் சிலையாய் கிடக்க..!

எண்ணம் முழுதும் உன் நினைவுத்தீயில் உருக..!
என் காதலும் அதில் விழுந்து கருக..!

சிந்தையில் உன் முகம் தெளிவாய் தெரிய
அன்பிற்கு ஏங்கும் ஓர் அனாதையாய் கிடக்கிறேன்..!

உடல் அசௌகரியமாக இருந்தாலும்
மனம் தேடுவதென்னவோ உன் அருகாமையையே..!

மரத்துப்போகும் மருந்தெதற்கு
நீ தந்த வலியைவிடவா வலித்துவிடப்போகிறது..!

கசக்கும் உணவெதற்கு
உன் கருவிழி கண்டால் போதுமெனக்கு..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (3-Feb-17, 5:03 pm)
பார்வை : 91

மேலே